தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எண்ணூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

திருவொற்றியூர், ஜூலை 29: எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் செல்கின்றனர். ஆனால் பயணிகளின் எண்ணிக்கை ஏற்ப இங்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் சென்னைக்குச் செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலையமும் பழுதடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, கே.பி.சங்கர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி, சிஎஸ்ஆர் நிதியில் ரூ.1 கோடி என ரூ.3 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் சீரமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான பணியும் துவக்கப்பட்டது. மேலும் இங்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்து இதற்கான மனுவையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரியும், அடிப்படை வசதி இல்லாத பேருந்து நிலையத்தை விரைவாக சீரமைக்க வலியுறுத்தியும், எண்ணூர் மக்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எண்ணூர் பஜார் தெருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement

Related News