தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றால் குறைந்த பொது மக்கள் நடமாட்டம்

 

Advertisement

மஞ்சூர், ஜூன் 23: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் இடை விடாமல் வீசும் சூறாவளி காற்றால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மழை மற்றும் சூறாவளி காற்றின் தாக்கம் முற்றிலுமாக நின்று போன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பலத்த மழை பெய்தநிலையில் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதை தொடர்ந்து சமீப நாட்கள் வரை சகஜநிலை ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. முன்தினம் இரவு விடிய, விடிய சூறாவளி காற்று வீசிய நிலையில் நேற்றும் பகல் முழுவதும் தொடர்ந்தது. இதனால் பகல் நேரத்திலும் கடும் குளிர் ஏற்பட்ட நிலையில் கடைவீதி, பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.

Advertisement

Related News