தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூரில் மண் சூழ்ந்து காணப்படும் பிரணவமலை குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

திருப்போரூர், ஜூலை 22: திருப்போரூரில் மண்ணால் சூழ்ந்து காணப்படும் பிரணவமலை குடிநீர் கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் உள்ள பிரணவமலையின் மீது பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல ஓஎம்ஆர் சாலையில் பிரணவமலைக்குச் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலை ஒட்டி தர்ம சத்திரத்திற்குச் சொந்தமான கிணறு ஒன்றும் உள்ளது.

இந்த, கிணற்றில் மோட்டார் மற்றும் குழாய் பொருத்தப்பட்டு பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கும், திருப்போரூர் அரசு தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் அண்மையில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மண்ணை இந்த ஒப்பந்த பணிகளை செய்தவர்கள் கிணற்றை சுற்றி கொட்டி விட்டனர். இதன் காரணமாக கிணற்றுக்குள் மண் சேர்ந்து விட்டது.

இதனால், பள்ளிக்கும், பிரணவமலை கோயிலுக்கும் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த கிணற்றை சுற்றி கொட்டி வைத்துள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்றும், கிணற்றுக்குள் கொட்டி உள்ள மண்ணை தூர்வாரி கோயிலுக்கும், பள்ளிக்கும் தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement