தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போர்வெல் பழுதை நீக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை, ஜூலை 3: திருவாடானை அருகே பழுதடைந்த போர்வெல்லை பழுது நீக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சி, சீர்தாங்கி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சீர்தாங்கி கண்மாய் பகுதியின் அருகில் உள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த போர்வெல் மூலம் செல்லும் குடிநீரானது சீர்தாங்கி பகுதி மட்டுமின்றி, கருமொழி ஜம்பு வழியாக தொண்டி பேரூராட்சி வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த போர்வெல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிக்கு வாகனம் மூலம் டேங்குகளில் கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய் கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த பழுதடைந்த போர்வெல்லை உடனடியாக பழுதுநீக்கி தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement