தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீரான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எடையூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள கொக்கிலமேடு உலக மாதா கோயில் தெரு, கெங்கையம்மன் கோயில் தெரு, ராஜிவ் காந்தி தெரு, டாக்டர் அம்பேத்கர் தெருக்களில் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருக்களில் தினமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, பின்னர் தெருவில் உள்ள குழாய்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அதுவும், குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. அப்படி விநியோகிக்கும் குடிநீர் சில நேரங்களில் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, உலக மாதா கோயில் தெருவில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள மக்கள் காலி குடங்களை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, எடையூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் பஞ்சத்தை போக்கி உரிய முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News