தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மின் கட்டண மையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

திருப்போரூர்: நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மின் கட்டண மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. அம்மாப்பேட்டை கிராமத்தில் 110 கிலோ வாட் திறன்கொண்ட மின் வழங்கல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.

இப்பணியில் மின் பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாக நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இதனால் புதிய மின் இணைப்பு கோரியும், மின் கட்டணம் செலுத்தவும் திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு நேர விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படுவதை தவிர்க்க, நெல்லிக்குப்பம் மின் வழங்கல் நிலையத்தில் புதிய உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்றும், மின் கட்டண செலுத்தும் மையம், புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அளிக்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News