தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை ஜிஹெச்சில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை, மே 21: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்க தொடங்கியது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதணைக்காக வருகின்றனர். இங்கு விபத்தில் சிக்குபவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

Advertisement

இரண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேர விரயத்தால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் பலர் தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரத்தக் கசிவிற்கான அறுவை சிகிச்சை, ரத்தக்குழாய் துண்டிப்பு அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்களும் இல்லை. இதனால் இப்பாதிப்பு ஏற்பட்டவர்களும் முதலுதவி சிகிச்சையுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வசதி இல்லாததால் தீக்காயம், விஷம் சாப்பிட்டு கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் மதுரை மருத்துவமனைக்கே அனுப்பப்படுகின்றனர். இதயம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால் அதில் பலத்த காயமடைந்தவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பப்படுகின்றனர்.

தினந்தோறும் 10க்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். உயிர் பாதுகாப்பிற்கான சிகிச்சைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. வர்த்தக சங்க நிர்வாகி கூறியதாவது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றால் அனைத்து நோய்களுக்கான மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கிய தேவையான துறையான நரம்பியல், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட துறைகளுக்கே போதிய மருத்துவர் இல்லை. தினந்தோறும் உயிருக்கு போராடும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தொடர்ந்து மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். காலம் கடத்தாமல் நரம்பியல் உள்ளிட்ட முக்கிய துறை மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News