தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றம்-நீலாங்கரை இடையே மாநகர பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல், அக். 5: சென்னை புழல், வடகரை, வடபெரும்பாக்கம், பாடியநல்லூர், சோழவரம், நல்லூர், அலமாதி, பொத்தூர், பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 முதல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநகர பேருந்துகளில் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்கின்றனர். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் தடா, வரதபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு, இந்த பழமை வாய்ந்த மிகப்பெரிய செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்து, இங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்னைக்கு சென்று வருகின்றனர். ஆனால், செங்குன்றத்தில் இருந்து சென்னை தலைமை செயலகம், அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரை, அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், நீலாங்கரை, மாமல்லபுரம், செங்கல்பட்டு போன்ற முக்கிய பகுதிகளுக்கு, செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்து வசதி இல்லை. இதனால் 2, 3 மாநகர பேருந்துகளில் மாறி சென்று மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மாநகர பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று புழல், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement