தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி மரத்தை வெட்டியதால் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நெல்லிக்குப்பம், ஜூலை 30: நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில போதுமான கட்டிட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் பள்ளி வளாகத்தில் அரசு மூலம் 9 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள பழமையான மரங்கள் பள்ளி மேலாண்மைக்குழு அனுமதியோடு வெட்டப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தாரணி பார்த்திபன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பள்ளி வளாகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Advertisement

தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் அனுமதி பெற்று வெட்டப்பட்ட மரங்களை பள்ளியிலிருந்து வெளியில் எடுத்து செல்ல வேண்டும் எனவும், வேறு ஏதேனும் பள்ளி மீது புகார்கள் இருப்பின் மாவட்ட கல்வி துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி கட்டுமான பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, கிராம நிர்வாக அலுவலர் கயல்விழி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தினை அளவீடு செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பாலூர் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News