தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்: பேரையூர் அருகே பரபரப்பு

 

பேரையூர், ஜூலை 4: பேரையூர் அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரையூர் அருகே அனுப்பபட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறும்போது, ‘‘நத்தம் காலியிடத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இடிக்கும் நடவடிக்கையை அனுமதிக்க மாட்டோம். இந்த பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றனர்.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்ற உத்தரவு என்பதால், ஜூலை 20ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related News