தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமத்துவ பொங்கல் நலத்திட்ட உதவி வழங்கல்

 

Advertisement

அவிநாசி, ஜன.11: திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன சங்கத்தின் நிறுவனத்தலைவர் சரவணன் ஏற்பாட்டில் கன்ஸ்மர் அபாரன்ஸ் விங் தலைவர் ராமகிருஷ்ணன், தலைமையில் நேற்று சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இதில் திருப்பூர், அவினாசி, காங்கேயம், பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, பெருமாநல்லுர், சேவூர், குன்னத்தூர், ஈரோடு, சேலம், மேட்டூர், எடப்பாடி உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சேலை, பொங்கல் அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், ஈரோடு ஓவியர் வள்ளி நாராயணன், நல்லூர் நுகர்வோர் நல மன்றம் தலைவர் சண்முக சுதந்தரம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பர் அசோசிசன் தலைவர் கிருஷ்ணசாமி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சிந்து சுப்ரமணியம், செயலாளர்கள் ஆண்டிபாளையம் ரவி, ராதாகிருஷ்ணன், சங்க துணைத்தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement