தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 10: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும். 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கான நிதிப்பகிர்வினை ஒன்றிய அரசு முறையாக வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூர்வ ஓய்வூதியம் உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்காலை கைவிட வேண்டும்.

காலிப்பணியடங்களை நிரப்பிட வேண்டும் மற்றும் காலாவதியான பணியிடங்களை புதுப்பித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு பேரணியாக வந்து கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related News