தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அருங்காட்சியகத்திற்கு புலிக்குத்தி நடுகல்லை கொண்டு செல்ல எதிர்ப்பு: கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 

Advertisement

வத்திராயிருப்பு, பிப். 10: வத்திராயிருப்பு தாலுகா சுரைக்காய்பட்டி புலிக்குத்தி அய்யனார் கோயிலில் உள்ள நடுகல்லை சென்னை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு தாலுகா சுரைக்காய்ப்பட்டி ஊருக்கு மேற்கே தொல்லியல் சிறப்பு மிக்கதாக இருக்கும் புலிக்குத்தி அய்யனார் கோயிலை பாதுகாக்கவும், அங்கு உள்ள நடுகல்லை சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டு வைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு சுரைக்காய் பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக சமாதான கூட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள், அருங்காட்சியக அதிகாரிகள், கிராம பொதுமக்கள், நடுகல்லை குலதெய்வமாகக் கும்பிடுபவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது புலிக்குத்தி அய்யனார் கோயிலை தங்களின் சொந்தப் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாகவும், புலிக்குத்தி நடுகல்லுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து கொள்வதாகவும், அதனால் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

அதைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

Advertisement

Related News