தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகிளிப்பட்டியில் குறைவான விலைக்கு காய்கறி விற்பதற்கு எதிர்ப்பு

கரூர், செப். 19: கரூர் மாவட்டம் மகிளிப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் விளையும் கத்திரி, வெண்டை, முருங்கை மற்றும் பாகற்காய் ஆகியவற்றை தினமும் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். உழவர் சந்தையில் இவருக்கு என ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் சந்தைப் பகுதியில் காய்கறிகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விவசாயி, நேற்று உழவர் சந்தைக்கு முன்பாக வந்து, காய்கறிகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Advertisement

இதன் காரணமாக சந்தையின் முன்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உழவர் சந்தையில் தினமும் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்க குலுக்கல் நடைபெறும். இதே போல்தான் இந்த விவசாயிக்கும் கடை ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த விவசாயி ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனை செய்யாமல் வேறு பகுதியில் விற்பனை செய்வதால் மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாகத்தான் இந்த பிரச்னை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News