தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

 

Advertisement

சாத்தூர், ஜூன் 5:விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவர் மேட்டமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மே 23ம் தேதி வீட்டில் இருந்து செல்வக்குமாரை தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்காக தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளரின் சகோதரர் தினேஷ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அன்று இரவு வீட்டிற்கு வராமல் இருக்கவே மனைவி வேலுத்தாய் கணவரை தேடிவந்த போது அப்பகுதியில் உள்ள பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இருந்துள்ளார்.

அங்கிருந்தவரை வீட்டிற்கு அழைத்து சென்று கேட்ட போது தன்னை தீப்பெட்டி அலுவலகத்தில் இருந்த பார்த்தசாரதி, தினேஷ் மற்றும் ஒருவர் கம்பியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்தவரை சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி வேலுத்தாய் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இறந்த செல்வகுமாரின் உடலை சாத்தூர் அரசு மருத்துவ மனையில் உடற்கூராய்வு செய்தனர். பின்னர் உறவினர்கள் அடித்து கொலை செய்த மூன்று பேரை கைது செய்ததால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என சாத்தூர் அரசு மருத்துவ மனையின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Advertisement

Related News