தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு 2வது நாளாக போராட்டம்: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி, மே 21: திருத்தணி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 2வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அங்கு மதுபானங்களை கொண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்கள் வைத்துள்ளனர். இந்த மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபானம் வைத்துள்ள கடைமுன்பு கிராம மக்கள் ஒன்று கூடினர். தொடர்ந்து, திருத்தணி டிஎஸ்பி கந்தனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து நேற்று முன்தினம் கோரிக்கை மனு வழங்கினர். இதில், பட்டாபிராமாபுரம் கிராமத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை பெண்கள் கல்லூரிக்கு அருகில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

Advertisement

இந்நிலையில் நேற்று 2வது நாளாக பட்டாபிராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் மதுக்கடை திறக்க உள்ள கடை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் மதியரசன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து பட்டாபிராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை என்றும், பொதுமக்கள் தேவையின்றி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Related News