தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொது மக்களுக்கு பரிசு

 

Advertisement

மேட்டுப்பாளையம்,அக்.29:மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தால் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. நேற்று 4 வது வார்டுக்குட்பட்ட மதீனா நகர், எல்.எஸ்.புரம் பகுதிகளில் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்த குப்பைகளை வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் அமுதா,நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

அப்போது,சுகாதார ஆய்வாளர் மகாராஜன், ரவிசங்கர்,தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர். நகராட்சி கமிஷனர் அமுதா பேசுகையில்:தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை,இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.பொதுமக்கள் குறைந்த ஒலியுடன்,குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். எனவே,பொதுமக்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Advertisement

Related News