தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்குவளவேலி அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சாதனைகள் புரிந்த மா ணவர்களுக்கு பரிசு

 

Advertisement

வலங்கைமான், ஜூன் 28: வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏழு மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். இதில் லோகேஷ்குமார் 480/500, அட்சயா 467/500, ஜனனிஸ்ரீதேவி 442/500, ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

மேலும் இரண்டு மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். அது போல பள்ளிப் புத்தாக்க சிந்தனைகள் செயல் திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சாதுப்பிரியன், மூர்த்தி, நித்திஷ் குமார், ஜனார்த்தனன், திவ்யந்த் ஆகியோர் அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி வழிகாட்டுதலின்படி தயாரித்திருந்த ‘தூசி இல்லாத துடைப்பான் திட்டம்’ தேசிய அளவில் சிறந்த யோசனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் வகையில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார், சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். கும்பகோணம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பிரபாகரன், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் விஸ்வநாராயண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.

மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் இளையராஜா, விஜயகுமாரி, ரேணுகா, சுதா, அலுவலர்கள், மற்றும் மிட் டவுன் ரோட்டரி சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement