தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனியில் ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 

Advertisement

தேனி, ஜூலை 7: தேனியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தேனியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில், கடந்த கல்வி ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் சையது சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தார்.

தொழிலதிபர் பொன்ராஜ் கொந்தாளம் முன்னிலை வகித்தார்.

தேனி புது பள்ளிவாசல் தலைவர் சார்புதீன் வரவேற்பு பேசினார். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். இவ்விழாவில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்சி தொழில் அதிபர் கலீல் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவின் போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 533 மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இவ்விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் உறவினர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement