தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் குடியாத்தம் தனியார் நிதிநிறுவனம்

வேலூர், மே 18: குடியாத்தம் தனியார் நிதி நிறுவனம் அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று குடியாத்தத்தைச் சேர்ந்த 11 பேர் நேற்று வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய பலர் பணத்ைத கொடுத்தனர். இதேபோல் நாங்களும் ₹5 லட்சம், ₹10 லட்சம் என பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தோம். மொத்தமாக ₹1 கோடி வரை கொடுத்துள்ளோம். அவ்வாறு பணத்தை செலுத்திய சில மாதங்களில் அவர்கள் தெரிவித்தபடி மாதந்தோறும் முறையாக வட்டி கொடுத்து வந்தனர். இதனால் மேலும் பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வட்டி தருவதை நிறுத்தி விட்டனர். இதுதொடர்பாக நாங்கள் அந்த நிறுவனத்தில் கேட்க சென்றபோது நிதி நிறுவன உரிமையாளர் இல்லை. அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. பலமுறை சென்றபோதும் உரிமையாளரை பார்க்க முடியவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இம்மனுக்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement