தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் ஊழியரிடம் ₹5.76 லட்சம் மோசடி

 

Advertisement

கிருஷ்ணகிரி, மே 31: கிருஷ்ணகிரி அடுத்த பாகலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு, கடந்த பிப்ரவரி 28ம் தேதி, விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில், அதிகளவில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியிருந்தது. இதையடுத்து, அதில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளார். பின்னர், அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித இரட்டிப்பு லாபமும் கிடைக்கவில்லை. மேலும், அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர், இதுபற்றி நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement