தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை

 

புழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் தஞ்சாவூர் அம்மாபேட்டை வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (27) என்பது தெரிய வந்தது.

இவர் அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு போதையில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இவரை கொலை செய்த 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.