தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்மார் ஊராட்சியில் ரூ.1.30 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Advertisement

திருப்போரூர்: பொன்மார் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பொன்மார் ஊராட்சியில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். ெபான்மார் ஊராட்சியில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ நாராயணன் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்து, பேசினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இந்நிகழ்வில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் அரிபாஸ்கர் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, ஊராட்சி துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News