தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பொருட்காட்சிக்கு ஆயத்தப்பணிகள் தீவிரம்

சேலம், ஜூலை 11: சேலத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், இம்மாத இறுதியில் அரசுப் பொருட்காட்சி செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 22 நாட்கள் நடக்கும் ஆடிப்பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பண்டிகையையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சேலத்தில் ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படும். இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சி நடத்தும் வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திடலில், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில், அரசுத்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் சார்பில் சுமார் 200 அரங்குகளும் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருவதால், சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வமுடன் அரசுப் பொருட்காட்சிக்கு வந்து சென்றனர். தற்போதும் அதே இடத்தில் நடத்தப்படுவதால், பொருட்காட்சிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சி அரங்குக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் அரசுப் பொருட்காட்சி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News