தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுமலையில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு நேற்று துவங்கியது

ஊட்டி, மே 10: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்பும், பருவ மழைக்கு பின்னரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 367 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மசினகுடி வெளி மண்டலத்தில் உள்ள சீகூர், சிங்காரா மற்றும் நீலகிரி கிழக்கு சரகம் ஆகிய வனச்சரகங்களில் தாவர உண்ணி மற்றும் ஊன் உண்ணி விலங்குகள் மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.

Advertisement

இக்கணக்கெடுப்பு பணியின்போது 34 நேர் கோடுகளில் நேரடி மற்றும் மறைமுக தடயங்கள் மூலம் ஊன் உண்ணிகளின் வாழ்விட பயன்பாடு, அடையாள அளவை கணக்கெடுத்தல், தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு, தாவர உண்ணிகளின் வாழ்விட வகை மதிப்பீடு செய்தல் மற்றும் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும், யானை - சாணமுறை கணக்கெடுப்பு, மனித இடையூறுகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.  இப்பணியில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணி வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

பந்தலூர்,மே10: பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று, நேற்று காலை பந்தலூர் நோக்கி வரும்போது மேங்கொரேஞ் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தேயிலைத்தோட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். விபத்தில் சிக்கியவர்களை அக்கப்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News