தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

திருச்சி, ஜூலை 9: திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு உச்சிகால பூஜையில் முக்கனிகளை கொண்டு அபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது, மலைக்கோட்ைட மட்டுவார் குழலம்மை தாயுமான சுவாமி கோயில். இங்கு தாயுமான சுவாமியை தரிசித்தால் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். இதானால் இங்கு திருச்சி மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் பிரதோஷமான நேற்று உச்சிகால பூஜையில் சுவாமி தாயுமான ஈசனுக்கு முக்கனிகளான மா, பலா, வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் உமா லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related News