தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டம்

குமாரபாளையம், ஏப்.28: தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சம்மேளன கூட்டம், குமாரபாளையம் சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரன், பொருளாளர் அசோகன் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று விவாதித்தனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களாலும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி மேற்கொண்ட சட்ட திருத்தத்தாலும், விசைத்தறி தொழிலில் பெரு முதலாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், இந்த தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

கொள்ளை லாபமடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளால் ஏற்பட்டுள்ள விலை உயர்வால், உழைக்கும் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, வரும் மே 20ம்தேதி நடைபெறும் நாடு தழுவிய விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டத்தை விளக்கி, மாவட்ட அளவில் கருத்தரங்கம், தெருமுனை கூட்டம், ஆலை வாயிற்கூட்டம், பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Related News