தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1.50 கோடியில் மேம்படுத்தப்படும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலைய பணிகள் 90 % நிறைவு: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

திருத்தணி, ஜூலை 6: பொதட்டூர்பேட்டையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள் விரைவில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, பொதடூர்பேட்டை பேரூராட்சியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொதட்டூர்பேட்டைக்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். 1980ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், சென்னை, வேலூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

Advertisement

பேருந்து நிலையத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் பலவீனமடைந்த நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பேருந்து நிலையத்தில், பழைய கடைகள் அகற்றி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாக கட்டிடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 18 கடைள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு மேற்கூரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், விரைவில் வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மழை மற்றும் வெயிலுக்கு பயணிகள் அவதிப்படுவதை தடுக்க பேருந்து நிலையம் முழுமையாக மேற்கூரை அமைத்து மூடப்பட்டு, வசதிகள் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின் பேரில், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 30 நாட்களில் பணிகள் முழுமை பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News