தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால் ஆபாச படம் வெளியிடுவதாக சித்தி, தங்கைக்கு மிரட்டல்: வாலிபர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் கோவிந்தசுவாமி தெருவை சேர்ந்தவர் ரம்யா (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கல்லூரியில் பயிலும் ஒரு மகள் உள்ளார். ரம்யாவின் அக்கா மகனான காசிமேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஆண்டனி (25), கடந்த 3 மாதங்களாக ரம்யா வீட்டில் தங்கி வந்துள்ளார். இரவு நேரங்களில் அவர் குடித்து விட்டு வந்ததால், அவரை இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என ரம்யா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் ஆண்டனி, ‘‘உங்களது அந்தரங்க படங்கள் எனது செல்போனில் உள்ளன.

அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆகாஷ் ஆண்டனியை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அவ்வாறு எந்த படங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் ரம்யா மற்றும் அவரது மகளுக்கு மிரட்டல் விடுத்ததால் அவரை சிறையில் அடைத்தனர்.