தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகிரி அருகே குளம் தூர்வாரும் பணி

 

Advertisement

ஈரோடு, ஆக.6: சிவகிரி அருகே குளம் தூர்வாரி குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணியினை ஈரோடு எம்.பி. பிரகாஷ் தொடங்கி வைத்தார். சிவகிரி அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் 3.5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டப்பட்ட இக்குளத்தினை கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தற்போதைய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்து, குளம் தூர்வாரப்பட்டது.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப்பிறகு, அமைச்சர் உதயநிதி ஆலோசனையின் பேரில், இக்குளம் மாதிரி குளமாக தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் தூர்வாரி குளத்தை சுற்றிலும் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் குளத்தில் கலக்காத வகையிலும், குளத்தின் சுற்று கரைகளை அகலப்படுத்தி பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, பொதுமக்கள் வாக்கிங் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜையினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈ.ஐ.டி. நிறுவன பொது மேலாளர்கள் சஜித்தாயர், தங்கராஜ், பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத்தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News