தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாளையில் தகராறை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை, ஜூன் 23: பாளையங்கோட்டை வஉசி விளையாட்டு மைதானத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்ட போது தட்டிக்கேட்ட மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகம்மதுஅப்துல்லா (26). இவர் மணிமுத்தாறு பட்டயாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரும், அவரது மனைவியும் பாளையங்கோட்டையிலுள்ள வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 பேர் ெகாண்ட கும்பால் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனையறிந்த முகம்மதுஅப்துல்லா அந்த கும்பலை சமாதானபடுத்தி தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 2 பேர் அரிவாளால் முகம்மதுஅப்துல்லா கையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அவரது மனைவி அலறி கூச்சல் போட்டார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீஸ்காரரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிபாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related News