தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காவல் நிலையத்தில் காவலாளி கொலை விழுப்புரம் மாவட்டத்தில் 6 தனிப்படைகள் கலைப்பு

விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் மாவட்டத்தில் டிஜிபி உத்தரவு எதிரொலியாக எஸ்பி, டிஎஸ்பி வசம் செயல்பட்டு வந்த 6 தனிப்படைகள் கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல்போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளியை போலீசார் அடித்து கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் எதிரொலியாக தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் எஸ்.பி மற்றும் டிஎஸ்பி வசம் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 6 தனிப்படைகளை கலைத்து எஸ்.பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட எஸ்பி தலைமையில் ஒரு தனிப்படையையும், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம்,ஆகிய 5 காவல் உட்கோட்ட அளவில் என மொத்தம் 6 தனிப்படைகள் எஸ்ஐ தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை டிஜிபி கலைக்க உத்தரவிட்டதன்பேரில் நேற்று எஸ்பி சரவணன் தனிப் படைகளை கலைத்து அதிலிருந்த எஸ்ஐக்கள், போலீசார்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி, மணல், சாராயம் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களை ரகசியமாக கண்காணித்தும், குற்றவாளிகளை கைது செய்து இந்த தனிப்படை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.