தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 மாணவர்களை பழனியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் வீட்டை விட்டு வெளியேறிய

வேலூர், ஜூலை 1: பெற்றோர் படிக்க சொல்லி அறிவுறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவர்களை வேலூர் போலீசார் பழனியில் மீட்டு நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் நெருங்கிய நண்பர்களான 3 மாணவர்கள் கடந்த 27ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைககவில்லை. இதுகுறித்து மாயமான 3 பேரின் பெற்றோர்களும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தார். இதற்கிடையில், மறுநாள் 28ம் தேதி இரவு பழனி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுவர்களையும் அங்குள்ள போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 3 பேரும் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதாகவும், பெற்றோர் படிக்க சொல்லியும், வேலை செய்ய சொல்லியும் திட்டியதால், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பழனி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் பாகாயம் போலீசார் பழநிக்கு விரைந்து சென்று 3 மாணவர்களையும் மீட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் அழைத்து வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement

Related News