தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போலீசார், துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

தோகைமலை, ஏப். 4: தோகைமலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் துணை ராணுவ படையின் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. இந்தியாவில் 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து இந்தியாவில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கை பணிகளுக்காக மத்திய துணை ராணுவ படைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது.

Advertisement

இந்த பணிகளுக்கு இந்திய துணை ராணுவ படைகளை கூடுதலாக வரவழைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளை உறுதிபடுத்தும் விதமாக நேற்று தோகைமலையில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையின் அணிவகுப்பு பேரணி நடந்தது. தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை ஏற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணி வகுப்பானது திருச்சி மெயின் ரோடு, தோகைமலை கருப்பகோவில் தெரு, கடைவீதி, வாரச்சந்தை, மணப்பாறை குளித்தலை மெயின்ரோடு வழியாக மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்று முடிவடைந்தது. இந்த அணி வகுப்பில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ பாலசுப்ரமணி உள்பட துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News