தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னசேலத்தில் 9 மாத கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை

சின்னசேலம், ஜூன் 12: சின்னசேலத்தில் 9 மாத கர்ப்பிணி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (39). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் (30) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெள்ளையம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நேரத்தில் இவர் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த வெள்ளையம்மாள் மீண்டும் மயக்கம் வருவதாக கூறி நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வெள்ளையம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பெரியசாமி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News