தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

சத்தியமங்கலம், ஜூன் 27: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் சத்தியமங்கலத்தில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஈரோடு ஏடிஎஸ்பி ராஜா ரணவீரன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக எழுதி காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement

இதில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறை சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டு திப்பு சுல்தான் சாலை வழியாக வடக்குப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் ஈரோடு ஏடிஎஸ்பி ராஜா ரணவீரன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News