தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேம்பாலம் கட்டும் பணிக்காக போலீஸ் செக்போஸ்ட் காலி; விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 

Advertisement

கோவை, ஜூன் 30: கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ. தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. மூன்று பேக்கேஜ் மூலமாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. முதல் பேக்கேஜ் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு நடக்கிறது. இதில் மைல் கல் பகுதியில் ஒரு மேம்பாலமும், மாதம்பட்டியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது. மைல்கல் பகுதியில் சர்வீஸ் ரோடு மற்றும் தரை பாலம் கட்டும் பணிகள் நடந்தது.

சுடுகாட்டின் முன் பகுதியை அகற்றி அந்த இடத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. தற்போது 30 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக மைல்கல் எல்லை போலீஸ் செக்போஸ்ட் அகற்றப்பட்டது. ரோட்டோரத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படவுள்ளது.

பஸ் ஸ்டாப்பும் இங்கே இருந்து அகற்றப்பட்டது. 200 மீட்டர் தூரத்திற்கு ரோட்டின் ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஒரிரு நாட்களில் அகற்றப்படும். மேம்பாலம் கட்டி முடிந்த பின்னர் போலீஸ் செக்போஸ்ட் கட்டி தரப்படும். அதுவரை தற்காலிக இரும்பு கூடாரத்தில் போலீஸ் செக்போஸ்ட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News