தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருக்கோவிலூரில் காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடிய கைதியை 48 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

திருக்கோவிலூர், ஜூலை 8: அரகண்டநல்லூரில் வழிப்பறி வழக்கில் கைதானவரை மருத்துவ பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 48 மணி நேரத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் காரணை பெரிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ஜெகன்(45), நிதி நிறுவனம் தொழில் செய்து வருகிறார். 4ம் தேதி வசூலை முடித்துக் கொண்டு அரகண்டநல்லூரில் இருந்து ஆற்காடு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பரனூர் காக்காகுப்பம் ஓடை அருகே சென்றபோது பைக்கில் எதிரே வந்த கீழக்கொண்டூரை சேர்ந்த அபிமன்யு மகன் பிரவீன்(27) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் வழிமறித்து, ஜெகனிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் வழக்கு பதிந்து பிரவீனை கைது செய்தனர். மாலை 4 மணி அளவில் காவலர் மணிவண்ணன், பாண்டியன் இருவரும் இருசக்கர வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் பைக்கை நிறுத்தியவுடன் பிரவீன் கீழே குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் கூச்சலிட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்களும் தேட தொடங்கினர். தகவல் அறிந்த போலீசாரும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத காரணத்தால் தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் வந்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கைதி தப்பி ஓடிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தேவநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் இரண்டு குழுக்களாக செயல்பட்டு அவரின் உறவினர் வசிக்கும் பகுதிகளான பெங்களூரு, சென்னை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அவரது சித்தி வீட்டுக்கு செல்லும் வழியில் தப்பி ஓடிய கைதி பிரவீனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காவல் கட்டுப்பாட்டில் இருந்த கைதி தப்பி ஓடிய 48 மணி நேரத்தில் மீண்டும் அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்ததால் மாவட்ட எஸ்பி சரவணன் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Related News