தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு போலீஸ் தடை அசம்பாவிதங்கள் தடுக்க நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலையொட்டி

ேவலூர், ஏப்.10: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 4ம்தேதி வரை வாட்டர் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்ெதாடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வேலூர் மாவட்டதில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாகன ஓட்டிகளுக்கு வாட்டர் கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற வழக்கு ெதாடர்புடைய நபர்களை கண்காணித்து வருகிறோம். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாகவோ, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்களுக்கு வாட்டர் கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Advertisement

Advertisement

Related News