தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருநாயை கடித்து குதறிய பிட்புல் வகை வளர்ப்பு நாய்: வீடியோ வைரல்

அம்பத்தூர்: அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம் பிரதான சாலை, முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், (47) தச்சு தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் சுந்தர மகாலிங்கம் என்பவரும் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சுந்தர மகாலிங்கம், தன் வீட்டில் அபாயகரமான பிட்புல் வகை நாயை வளர்த்து வருகிறார். காலை மற்றும் மாலை நேரங்களில் பிட்புல் நாயை வாயை மூடாமல் வெளியில் அழைத்து வருவார் என கூறப்படுகிறது.
Advertisement

இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை பிரபாகரன், தன் வீட்டில் வளர்க்கும் நாட்டு நாயை வெளியில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரில் வந்த சுந்தர மகாலிங்கத்தின் பிட்புல் வகை நாய், பிரபாகரனின் நாட்டு நாயின் வாயை கவ்வி பிடித்து குதறியது. வலியால் துடித்த நாட்டு நாயை காப்பாற்ற அருகில் இருப்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து பிட்புல் நாய், நாட்டு நாயை விடுவித்தது.

இதில், நாட்டு நாயின் வாய் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் படி, அம்பத்தூர் போலீசார், சுந்தர மகாலிங்கத்திடம் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News