தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடவாளத்தில் வழிபாட்டு உரிமை கோரிஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு

 

புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு அப்பகுதியிலுள்ள செல்லாயி அம்மன் மற்றும் கலியுக மெய்ய அய்யனார் கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், வடவாளம், இச்சடி அண்ணாநகர், கண்டங்காரப்பட்டி, சின்னையாசத்திரம், செட்டியாப்பட்டி, காயாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வடவாளம் ஊராட்சிக்குளள்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 1200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள  செல்லாயி அம்மன் மற்றும்  கலியுக மெய்யர் அய்யனார் கோவிலுக்குள் சென்று வழிபட எங்களுக்கு உரிமையில்லை. திருவிழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைக்க விடுவதில்லை. பால்குடம், காவடி, பூ எடுக்க அனுமதிப்பதில்லை. சமநீதியை வழங்க மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related News