தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுகை நகருக்குள் வரும் காட்டு வெள்ளத்தைத் தடுக்க சட்டமன்ற மனுக்கள் குழு தலைவரிடம் மனு

 

Advertisement

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை நகருக்குள் காட்டு வெள்ளம் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற மனுக்கள் குழு தலைவரிடம் 9வது வார்டு உறுப்பினர் செந்தாமரை மனு அளித்தார். புதுக்கோட்டையில் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி 9 வது வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு அளித்த மனுவில் கூறியிருப்பதாவுது: புதுக்கோட்டை மாநகரமானது பூகோள ரீதியாக வடக்கு பகுதி மேடாகவும் தெற்கு பகுதி பள்ளமாகவும் அமையப்பெற்றது. இதனால், மழை காலங்களில் வடக்கு பகுதியில் உள்ள தைலமரக் காடுகளில் பெய்யும் மழை நீர் ஊருக்குள் வந்துவிடுகிறது. இதனால், நகர பகுதியில் பாதிக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. மேலும், நகரின் மைய பகுதியில் உள்ள சாந்தாரம்மன் கோவில், காய்கறி மார்கெட், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒரு வார காலத்திற்கு மழை நீர் தேங்குவதுடன் கழிவு நீரும் கலந்து விடுகிறது.

தைலமர காடுகள் உள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் நாங்கள் மாநகராட்சி மூலமாக எந்த பணிகளும் செய்ய முடியவில்லை. எனவே, இது குறித்து ஆய்வு செய்து நகருக்குள் வரும் காட்டு வெள்ளத்தை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News