தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்களுக்கு விடுதி வசதி கோரி மனு

கோவை, ஜூன் 7: திராவிடர் தமிழர் கட்சி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சிங்காநல்லூரில் மாவட்ட ஆதி திராவிட நலத்துறையின் கீழ் ஆதிதிராவிட மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. இங்கு புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி ராமநாதபுரம், ஒண்டிப்புதூர், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த விடுதி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் அருகில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

Advertisement

பின்னர் இந்த விடுதி கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த விடுதியில் தங்க மாணவர்கள் வந்தனர். அப்போது விடுதி நிர்வாகிகள் இந்த விடுதி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. உங்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் எங்கு தங்குவது என தெரியாமல் உள்ளனர். இந்த விடுதியில் 13 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வந்த நிலையில், தற்போது தங்க இடம் இன்றி உள்ளனர். எனவே மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Related News