தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் காலியாக உள்ள வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க கோரி மனு

 

Advertisement

திருப்பூர், நவ.5: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூரில் தந்தை பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இங்கு வீடு ஒதுக்கியதில் வீடு பெற்ற உரிமைதாரர்கள் உள் வாடகைக்கு விட்டும், அடமானம் வைத்தும் வருகின்றனர்.

வசதி பெற்றவர்கள் முறைகேடாக வீடுகளைப் பெற்றுக் கொண்டு குடி இருக்காமல் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகவும், வாடகைக்கு வீடு எடுத்தவர்கள் ஆடு மாடுகளை அந்த வீட்டில் பராமரிக்கும் காரணத்தால் கொசு மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகி அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் உரிமை பெற்று உள் வாடைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களின் உரிமையை ரத்து செய்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அங்கு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement

Related News