தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தடையின்றி கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் புதுப்பட்டி சுரேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்று, வழிகாட்டுதலை பின்பற்றி 10-க்கும் மேற்பட்ட கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக கனிமவளத்துறை உதவி இயக்குனராக பொறுப்பேற்றவர் கிராவல் குவாரி லாரி உரிமையாளர்களுக்கு மண் எடுப்பதற்கு உரிமம் வழங்குவதில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கிராவல் மண் எடுக்க முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், லாரி உரிமையாளர்கள் லாரிக்கு மாத கடன் தவணை செலுத்த முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கட்டிட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வேலை இழந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி, தடையின்றி கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கி தஞ்சாவூர் மாவட்ட லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது செயலாளர் சிங்.அன்பழகன், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.முன்னதாக மனு அளிக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.