தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வார்டு கூட்டம்

குன்னம், அக்.31: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் கடந்த மூன்று தினங்களாக ஒவ்வொரு நாளும் ஐந்து வார்டுகள் வீதம் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் (பெர) ருக்மணி முன்னிலையில் பொதுமக்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை மனுவாக கொடுத்தனர்.

Advertisement

மேலும், தற்சமயம் மழைக்காலம் என்பதால் வெள்ளாற்றில் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து நீர்வரத்து அதிகம் வர வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இறந்து போன சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே இந்த துயர சம்பவம் இனிமேலும் நடைபெறாத வண்ணம் ஆற்றின் கரைகளை உயர்த்தி கட்ட வேண்டியும், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து பஸ்களும் பேருந்து நிலையம் உள்ளே சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுக்கள் அளித்துள்ளனர். கூட்டத்தில் துணைத் தலைவர் ரசூல் அகமத் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News