தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆலத்தூர் தாலுகா கூடலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு

பாடாலூர், அக்.30: ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத்துறை அமைச்சருடன் ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் என்.கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் ஒன்றிய குழு தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இந்தநிலையில் நேற்று சென்னை சென்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் 2 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்ததை நினைவுப்படுத்தினார். அதை தொடர்ந்து அந்த நிலத்தில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தியிடம் உறுதி அளித்தார்.

 

Advertisement