முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் சு.ஆடுதுறை பள்ளி முதலிடம்
குன்னம், ஆக.29: சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் வாலிபால் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட 32 அணிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர்களும், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இதைதொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.