தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறைமங்கலம் ஏரிக்கு நீர்செல்லும் வரத்து வாய்க்காலில் புதர்போல் மண்டிகிடக்கும் கோரைபுற்கள்

பெரம்பலூர், ஆக.22: கலெக்டர் அலுவலக சாலையில் கோரைபுற்கள் புதர்போல் மண்டிக் கிடக்கும் துறைமங்கலம் ஏரிக்கான வரத்து வாய்க்காலை வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கிலி தொடர்ச்சி வரத்து வாய்க்கால்கள் கொண்ட ஏரிகள் அதிகம் உள்ளன.

Advertisement

இதில் பிரதானமாக லாடபுரம் பெரிய ஏரியில் இருந்து நிரம்பி வரும் தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக, மேலப்புலியூர் ஏரி, குரும்பலூர் பாளையம் பெரிய ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் மேலஏரி, பெரம்பலூர் கீழ ஏரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி, துறைமங்கலம் பெரிய ஏரிக்கும் பின்னர், துறைமங்கலம் சின்ன ஏரிக்கும் தண்ணீர் சங்கிலி தொடர்ச்சியாக சென்று சேரும்.

இதில் நகரின் மையத்தில் தெற்கே அமைந்துள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரியிலிருந்து துறைமங்கலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லக்கூடிய சுமார் 2 கிமீ நீளமுள்ள வரத்து வாய்க்கால் தற்போது கோரைப்புற்கள் முட்புதர்போல் மண்டிக் கிடக்கிறது. இதனால் வரக்கூடிய வடகிழக்கு பருவமழையால் பெருகிவரும் மழைநீர் செல்வதற்கு தடையாக, குறிப்பாக அடர்ந்து மண்டி கிடக்கும் புதர்களால் தண்ணீர் தடைபட்டு வாய்க்கால் கரைகளை அறுத்துக் கொண்டு வெளியேறினால் அருகில் உள்ள நிலப்பரப்புகளுக்கு சென்று வீணாகும் நிலை உள்ளது.

எனவே வடகிழக்கு பருவமழை பெய்யும் முன்பாக போர்க்கால அடிப்படையில் துறைமங்கலம் பெரிய ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் புதர்களை அகற்றி தண்ணீர் எளிதில் பெரிய ஏரியை சென்றடைய நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஏரிப்பாசன விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News