தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரும்பாவூர் பேரூராட்சி சாதாரண கூட்டம்

பெரம்பலூர், ஆக.22: அரும்பாவூர் பேரூராட்சிக் கூட்டத்தில், வடிகால் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று (21ம் தேதி) காலை பேரூராட்சியின் கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

Advertisement

பேரூராட்சி துணைத் தலைவர் சரண்யா, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் சரண்ராஜ் தீர்மானங்களை வாசித்தார். இந்தக் கூட்டத்தில் அரும்பாவூர் பேரூராட்சியில் 2025-26 ம் ஆண்டு பொது நிதித் திட்டத்தின்கீழ், அ.மேட்டூர் 11வது வார்டு, பாரதியார் சாலையில் மேல் மூடியுடன் கூடிய வடிகால் அமைத்தல் பணிகள் ரூ.4.30 லட்சத்தில் மேற்கொள்வது.

2025-26 ஆம் ஆண்டு 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ், ரூ.8 லட்சத்தில் அரும்பாவூர் பொது மயானத்தில் 2 கான்கிரீட் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் அ.மேட்டூர் வார்டு எண் 15 மயானத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல், மேலும் ரூ13.50 லட்சத்தில், வார்டு எண் -6 வள்ளலார் தெருவில் வடிகால் அமைத்தல், 2025-2026ம் ஆண்டு 15வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ15லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 15, விஜயபுரம் ரோட்டோரம் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement